Monday, January 24, 2011

என் செய்தாயோ விதியே இது என் செய்தாயோ விதியே உன் பிஞ்சு மொழி பேசும் பிள்ளை பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே ஒரு சொந்தம் இல்லாத தந்தை சுய பந்தம் இல்லாத அன்னை இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே விதை மண்ணில் முளைகொண்ட போதே அதன் தலையில் இடி வீழ்ந்ததென்ன இனி வாழ்ந்து பயனென்ன என்ன விதியே....

Sunday, January 23, 2011

அகரம்

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு

கார்காலம் வந்தால் என்ன கடும் கோடை வந்தால் என்ன
மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவா இல்லை
நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு

Friday, January 21, 2011

பிரிவு

பிரிவு
என்பது
பிரிவதற்கு அல்ல!!
பிரியாத என் நண்பர்களின்
அன்பை நினைவு படுத்த
பிரிக்க முடியாத அவர்களின்
நட்பை வெளிபடுத்த
பிரிவினால் தான்
உணர்கிறேன் !!!!
பிரியமுடன் என் நண்பர்களின்
நட்பினை !!!
என்றும் நட்புடன்....