Wednesday, February 23, 2011


விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்குள் சண்டை வந்து விட்டது. ஒரு கட்டத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம், “நான்தான் நம் பெற்றோர் பெற்ற பிள்ளை. நீ தத்துப் பிள்ளை தான்!” என்றதும் அந்தக் குழந்தைக்கு முகம் வாட வில்லை.

மிகவும் பெருமிதத்தோடு, “பெற்றபிள்ளைக்கும் தத்துப் பிள்ளைக்கும் என்ன வேறுபாடு தெரியுமா? பெற்றபிள்ளை என்றால் கருப்பையில் வளர்ந்தவர்கள் என்று பொருள். தத்துப்பிள்ளை என்றால் இதயத்தில் வளர்ந்தவர்கள் என்று பொருள்.” இதைக் கேட்டதும், திட்டிய குழந்தை ஓடிவந்து கட்டிக் கொண்டது.
விழுந்தால் விதையாக விழு!
எழுந்தால் மரமாக எழு!

நம்பிக்கையற்றவன் மனித்னாகவே இருக்கமுடியாது.
செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு
லட்சியமாக இருத்தல் வேண்டும்.

உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒரு பொழுதும் அதிருப்தி
கொள்வதில்லை.

நல்ல சிந்தனைகள் உள்ளவரின் மனதில் குழப்பம் இராது.
நாம் எதச் செய்தாலும் நமது நோக்கத்தை மறவாதிருக்க வேண்டும்.
கடுமையினால் சாதிக்க முடியாததை அன்பு சாதித்து விடும்.

தன்னைத் தெரிந்து கொள்ளாமல் இந்த உலகம் முழுவதையும் தெரிந்து வைத்துக்
கொள்வதால் ஒரு பயனும் இல்லை

Sunday, February 20, 2011

விரல்கள் புல்லாங்குழலை
தொந்தரவு செய்ததால்தான்
இனிய ஓசை..
அன்பே!
உனது தொந்தரவும்
சுகம் தான் எனக்கு...!!

Tuesday, February 15, 2011

மழலைப் பருவத்தில்

பார்த்து வியக்க

ஒரு நட்பு...


குழந்தைப் பருவத்தில்

ஓடி விளையாட

ஒரு நட்பு...


காளைப் பருவத்தில்

ஊர் சுற்ற

ஒரு நட்பு...


வாலிபப் பருவத்தில்

பேசி ரசிக்க

ஒரு நட்பு...


முதிர்ந்த பின்

அனுபவங்களைப்

பகிர்ந்து கொள்ள

ஒரு நட்பு...


நட்புகள் ஆயிரம் இருந்தும்

நட்பின் தேவை குறையவில்லை...


தேவையின் போது

தோள்களில் சாய

நட்பு வேண்டும்...


துன்பத்தின் போது

கண்ணீர் துடைக்க

நட்பு வேண்டும்...


மகிழ்ச்சியின் போது

மனம் மகிழ

நட்பு வேண்டும்...


நானாக நானிருக்க

நட்பே...

நீ எனக்கு

நட்பாக வேண்டும்...