Monday, March 28, 2011

பாதை என்பது தானே வகுப்பது

பாதை என்பது தானே வகுப்பது
-------------------------------------------

'வகுத்துக் கொடுப்பார்கள்
வழி'என்று தண்ணீர்
தவித்துக் கிடந்ததா?

ஓடி ஓடியே
ஓடை தனக்கோர்
உற்சாகப் பாதையை
உருவாக்கிக் கொண்டது!

ஓடினால் ஓடை
உட்கார்ந்தால் குட்டை

எது தேங்குகிறதோ
அது ஏங்குகிறது!

No comments:

Post a Comment