பாதை என்பது தானே வகுப்பது
-------------------------------------------
'வகுத்துக் கொடுப்பார்கள்
வழி'என்று தண்ணீர்
தவித்துக் கிடந்ததா?
ஓடி ஓடியே
ஓடை தனக்கோர்
உற்சாகப் பாதையை
உருவாக்கிக் கொண்டது!
ஓடினால் ஓடை
உட்கார்ந்தால் குட்டை
எது தேங்குகிறதோ
அது ஏங்குகிறது!
No comments:
Post a Comment