Wednesday, June 30, 2010
ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு
ஆகவே தேனியிடம் இணக்கமாக நட்பு கொண்டு அதன் மூலம் தேனை சாப்பிட்டு விட வேண்டும் என்று அது எண்ணியது. குறங்குஅத்தனை நாவான்மை படைத்தது அல்ல. அதற்கு மற்றவர்களிடம் பழகவும் தெரியாது என்ற கெட்ட பெயர் இருப்பதை குரங்கும் அறியும்.
எனவே நீண்ட நேரம் யோசித்தது. பின் தேன் கூட்டருகே சென்று குரல் கொடுத்தது. ஒரு தேனி வந்து எட்டிப் பார்த்தது.
என்ன வேண்டும் என்று கேட்டது.
குரங்கு சொன்னது.
நிங்கள் எல்லாரும் எவ்வளவு இனிய தேனைச் சேகரிக்கிறீர்கள். ஆகவே உங்கள் சுபாவமும் குணமும் இனிமையானதாகத்தான் இருக்க முடியும் என்று நம்ம்புகிறேன். அப்படி இருக்க இந்த கொடூரமான கொடுக்கு உங்களுக்கு எப்படி ஏற்ப்பட்டது?
தேனீ கூறியது.
நீ சொல்வது உண்மைதான். நாங்கள் சுபாவத்திலே நல்லவர்கள். உழைப்பாளிகள். ஆகவே எங்கள் உழைப்புக்கு தக்க படி இனிப்பான தேனை நாங்கள் பெறுகிறோம். அதே போல எங்களை வன்முறையாக யாராவது சுரண்ட நினைத்தால் எங்களைத் துன் புறுத்தினால் அவர்களுக்குத் தக்க படி தண்டனை தர கொடுக்கும் உண்டாயிற்று
`
நீதி : நம் உழைப்பை ஏமாற்றி சுரண்டாமல் இருக்க நாம் ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் தேவையும்கூட...
`
இனிய காலை வணக்கம்...
Saturday, June 26, 2010
TRUE FACT
Every one may not be a POET at the beginning of the LOVE
But Surely Every One Becomes a Philosoper at the End of the Love
Good Morning Hav a Nice day
Thursday, June 24, 2010
Wednesday, June 23, 2010
Heritage of Tamil Language
* 1 = ONDRU -one
* 10 = PATHU -ten
* 100 = NOORU-hundred
* 1,000 = AAYIRAM-thousand
* 10,000 = PATHTHAYIRAM -ten thousand
* 100,000 = LATCHAM-hundred thousand
* 1,000,000 = PATHU LATCHAM - one million
* 10,000,000 = KODI-ten million
* 100,000,000 = ARPUTHAM-hundred million
* 1,000,000,000 = NIGARPUTHAM- one billion
* 10,000,000,000 = KUMBAM-ten billion
* 100,000,000,000 = KANAM-hundred billion
* 1,000,000,000,000 = KARPAM-one trillion
* 10,000,000,000,000 = NIKARPAM -ten trillion
* 100,000,000,000,000 = PATHUMAM -hundred trillion
* 1,000,000,000,000,000 = SANGGAM -one zillion
* 10,000,000,000,000,000 = VELLAM -ten zillion
* 100,000,000,000,000,000 = ANNIYAM -hundred zillion
* 1,000,000,000,000,000,000 = ARTTAM - Can any one answer this???
* 10,000,000,000,000,000,000 = PARARTTAM - ????
* 100,000,000,000,000,000,000 = POORIYAM - ??????
* 1,000,000,000,000,000,000,000 = MUKKODI - ????????
* 10,000,000,000,000,000,000,000 = MAHAYUGAM - ?????????
Fractions :
1= onRu
3/4= mukkaal
1/2= arai
1/4= kaal
1/5= naalumaa
3/16= moonRu veesam
3/20= moonRumaa
1/8= araikkaal
1/10= irumaa
1/16= maakaaNi (veesam)
1/20= orumaa
3/64= mukkaal veesam
3/80= mukkaaN
1/32= araiveesam
1/40 araimaa
1/64= kaal veesam
1/80= kaaNi
3/320= araikkaaNi munthiri
1/160= araikkaaNi
1/320= munthiri
1/102400= keezh munthiri
1/2150400= immi
1/2,3654400= mummi
1/16,5580800= aNu
1/149,0227200= kuNam
1/745,1136000= pantham
1/4470,6816000= paagam
1/31294,7712000= vintham
1/532011,1104000= naagavintham
1/7448155,5456000= sinthai
1/14,8963110,9120000= kathirmunai
1/595,8524436,4800000= kuralvaLaippidi
1/35751,1466188,8000000= veLLam
1/3575114,6618880,0000000= nuNNmaNl
1/2,3238245,3022720,0000000= thaertthugaL
Tuesday, June 22, 2010
Have a Good Day
Loser's visualize the penalties of failure, Winners visualize the rewards of success.
Have a Good Day
இனிய காலை வணக்கம்...
தன்னம்பிக்கை இழக்காதவன் தோல்விகளை இழக்கிறான்.
`
இனிய காலை வணக்கம்...
Good Morning
We tend to forget that happiness doesn't come as a result of getting something we don't have, but rather of recognizing and appreciating what we do have. |
|
காதல்
புரியாதவைகளின் புதையல் தான்.
கேள்விகளே
விடைகளாவது இங்கு மட்டும் தான்.
தெரியவில்லை என்ற
பதில் தான்
அதிகமாய் இங்கே பரிமாறப்படும்.
நடக்குமா என்னும்
வினாக்களுக்கும்,
முடியுமா எனும்
முகப்பாவனைகளுமே
காதலின் வழியெங்கும்.
ஒவ்வோர் மனசுக்கும்
தன் காதல் மட்டுமே
தெய்வீகம்,
மற்றவை எல்லாம்
மோகத்தின் வேஷங்கள்.
பார்க்குமிடமெல்லாம்
பிரமிடுகள் எழுந்தாலும்,
எங்கேனும் முளைக்கும்
ஓர் முளையை நம்பியே
நடக்கும்
இந்த பரிசுத்த ஆடுகள்.
கவிதைகளின் முதல் தளம்
பெரும்பாலும்
காதலின் அடித்தளம் தான்.
பிரபஞ்சம் சுருங்கினாலும்
தன் காதல் மட்டும்
தீர்க்கக் கோடாய் மாறியேனும்
தப்பிக்குமெனும்
தீர்க்கமான நம்பிக்கை,
காதல் கரைகளில் கிளிஞ்சல்களாகும்.
இது,
உதடுகள் திறந்து வைத்து
உணர்வுகளில்
பூட்டிட்டுக் கொள்ளும்
உற்சாக ஊற்று.
புலன்களுக்குச்
சொடுக்கெடுக்கும் பூக்கூட்டம்,
காதல்,
மௌனங்கள்
தினம் நடத்தும் பொதுக்கூட்டம்.
காதலியுங்கள்,
காதல்
நாட்டிய மலர்களின் நந்தவனம்.
தாண்டி வந்த திருப்தி
தோல்வியிலும் தொடரும்.
நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!
நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!
ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும் ...
அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல !
விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான் ' னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா ,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க ,
இல்ல ' வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!
'கஷ்டப்பட்டு ' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்.. .
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான் !
கேலி கிண்டல் பஞ்சமில்ல ,
கூத்து கும்மாள குறையுமில்ல ,
எல்லாருக்கும் சேத்துதான் punishment ன்னா
H.O.Dய கூட விட்டதில்ல !
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம் ...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு !
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல .. .
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல !
அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல ,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல !
படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல ...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!
வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர் 'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம் !
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்.. .
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான் ' னு
சமாளிச்சி எழுந்து போவோம் ...
நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ -மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு ...
தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல் ,
appraisal டென்ஷன் ,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா ?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல் ,
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா ,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா !
இ- மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க !
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது !
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது !
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா ' 'மச்சான் ' மாறாது !.
Monday, June 21, 2010
மரணமும் வாழ்க்கையும்
கப்பலிலேயே எப்பொழுதும் பணிபுரிகின்ற மாலுமிகளின் நிலை இதை விட மோசம் என்று திகைத்தார் அவர்.
அங்கிருந்த மாலுமி ஒருவனை அழைத்த அவர் உன் தந்தையார் என்ன பணிபுரிந்தார் ? என்று கேட்டார்.
என் தந்தையாரும் என்னைப்போல் கப்பலின் மாலுமியாகப் பணிபுரிந்தார். ஒரு நாள் அவர் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கி மூழ்கியதால் அவர் இறந்து விட்டார் என்றான்.
சரி உன் தந்தையாரின் தந்தையார் என்ன செய்தார் ? என்று கேட்டார் அவர்.
அவரும் மாலுமியாகத்தான் பணிபுரிந்தார். அவரும் கப்பரோடு மூழ்கி இறந்து போய் விட்டார். என்று பதில் சொன்னான் மாலுமி.
என்ன ? உன் தந்தையாரும் அவர் தந்தையாரும் கப்பலில் பயணம் செய்யும் போது இறந்து விட்டார்கள என்கிறாய். நீயும், மாலுமியாக இருக்கிறாய். கடலில் மூழ்கி இறந்து விடுவோம் என்ற அச்சம் உனக்கு இல்லையா ? என்று கேட்டார்.
உங்கள் தந்தையார் எப்படி இறந்தார் ? என்று கேட்டான் மாலுமி.
படுக்கையில் படுத்திருக்கும் போது.
அவருடைய தந்தையார் எப்படி இறந்தார்?
அவரும் படுக்கையில் படுத்திருக்கும் போது தான் இறந்தார் என்றார்.
உங்கள் தந்தையாரும் அவர் தந்தையாரும் படுக்கையில் படுத்திருக்கும்போது தான் இறந்து இருக்கிறார்கள். நீங்கள் எப்படி அச்சமில்லாமல் படுக்கையில் படுத்து உறங்குகிறீர்கள் ? என்று கேட்டான் மாலுமி
அப்பொழுதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. உயிரை எப்பொழுதும் காப்பாற்றி வைக்க முடியாது. அது நம் உடலை விட்டு நீங்கியே தீரும். நமக்குரிய கடமைகளை செய்து கொண்டு அச்சமின்றி வாழ்வதே மேலான வாழ்க்கை என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.
`
`
இனிய காலை வணக்கம்...
My lines - இனிய இரவு வணக்கம்
நன்றி உள்ளவர்கள் சிலர்,
நயவஞ்சகர்கள் பலர்,
பாசமுள்ளவர்கள் சிலர்,
பாசாங்கு செய்வோர் பலர்,
அன்புள்ளவர்கள் சிலர்,
அடக்கு முறை செய்வோர் பலர்,
தித்திப்பாய் பேசுவோர் சிலர்
திட்டுவோர் பலர்,"
உதவ எண்ணமுள்ளோர் சிலர்,
கைவிரிபோர் பலர்,
நம்மை பிடித்தோர் சிலர்,
வெறுப்போர் பலர்,
நம்மிடம் கடன் எதிர்பார்க்காதோர் சிலர்,
எதிர் பார்போர் பலர்,
நம் வளர்ச்சியை பொருத்து கொள்வோர் சிலர்,
பொறாமை கொள்வோர் பலர்..
நம் துன்பத்தை கண்டு வருந்துவோர் சிலர்,
மகிழ்ச்சி அடைவோர் பலர்....
முடிந்த வரை எல்லோருக்கும் நல்லவனாக,
உதவுபவனாக,
வாழ்வோம் நமக்காக...
வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்வது வெல்வதற்கே!
இனிய இரவு வணக்கம்
All s well - My lines
உன் வாழ்க்கை உன் கையில்
எந்தச் சமயத்திலும் கைவிடாமல் குறிக்கோள் வைத்து வெல். முயற்சியை நிறுத்தும்போதுதான் தோற்கிறாய்.
தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் சாம்பியன்கள் மற்றவர்கள் நம்பவில்லையென்றாலும் 'நம்மால் முடியும்' என்பதை நம்பியவர்கள், முடியும் என்றால் முடியும்.
தோல்வியிலிருந்து எதும் கற்றுக் கொள்ளாவிட்டால்தான் அது உண்மையான தோல்வி.. தோல்வி உங்களை அடையாளம் காட்டும் நான் மற்றபடி வாழ்ந்தால் இன்னும் தப்புகள் செய்வேன்.
களத்தில் குதியுஙகள். கைகள் அழுக்காகட்டும், தடுக்கி விழுங்கள். எழுந்து நட்சத்திரங்களைச் சாடுங்கள்.
மேதை என்பது ஒரு சதவிகிதம்தான் உள்ளுணர்வு மற்றதெல்லாம் வியர்வை. ஆபத்தில்லாத, ரிஸ்க் எடுக்காத பாதைதான் அதிக ஆபத்தானது.
வெற்றிக்கு அதிக நாளாகும். நாள் மட்டும்தான்.
சின்ன காரியங்களை நன்றாக இப்போது செய்யுங்கள். நாளடைவில் பெரிய காரியங்கள் உங்களைத் தேடிவரும். எல்லா ஆரம்பங்களும் சிறியவையே ஆரம்பிப்பதுதான் கடினம்.
வாய்ப்புகளைப் பெரும்பாலோர் தவறவிடுவதற்குக் காரணம் அவை உழைப்பு வடிவத்தில் வருவதால். இதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி ஒட்டியிருக்காது.
கிடைப்பது உயிர் வாழப்போதும். கொடுப்பதில்தான் நிஜ வாழ்க்கை இருக்கிறது. மற்றறவரை உற்சாகப் படுத்தும்போது நமக்கு எத்தனை உற்சாகம் ஏற்படுகிறது!
யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள் ஆயிரம்பேர், ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்.
நட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை, சொந்தப்பாதை தேவை. இருட்டைக் கண்டு பயப்படக்கூடாது இருட்டில்தான் நடசத்திரங்கள் நன்றாக ஜொலிக்கும்.
மனசே மனசே கலங்காதே!
`
நீ பட்ட / படும் / படவிருக்கும்
கஷ்டங்கள் யாவும் உன் இஷ்டங்களே!
`
நீ அழுத / அழாத / அழ வேண்டிய
வேதனைக்குரிய தருணங்கள் யாவும்
உன்னுள் மனதின் வலிமையே!
`
நீ கடந்த / கடக்கும் / கடக்கவிருக்கும்
பாதைகள் யாவும் இன்னமும் வேணும்
எனும் அனுபவங்களே!
`
நீ புரியாமல் / குழம்பி / புழம்பித்
தவியாய் தவிக்கும் விடையில்லாக் கேள்விகள் யாவும்
உன் விழிகளில் மிதக்கும் புனிதக் கண்ணீர்த் துளிகளே!
`
ஆம் நம் விழிகளில் மிதக்கும் கண்ணீர்த்துளிகள்
யாவும் மிகப் புனிதமானவையாகும்!
`
அதை ஒருபோதும் எக்காரியத்தின் நிமித்தமும்
உன் மனம் தளர்ந்து நொந்து சிறிதுபோலும்
கண்ணீரைக் கசிய விடாதே கீழே சிந்திவிடாதே!
`
இதை நீ முழுமையாய் உணர்ந்து
உன் மனதுருகிவிடாமல் திடமனதாய்
பெலன் கொண்டு நான் வாழ வேண்டும்
வாழ்ந்து சாதிக்க வேண்டும் என போராடு...
உன் முழு தன்னம்பிக்கையுடன் எதையும்
எதிர் கொண்டு முடியும் வரை உந்தன்
வாழ்கையோடு போராடு!
`
முயன்றால் அகிலமும் உனக்குத்தான்!
Good morning
If you are humble nothing will touch you,
neither praise nor disgrace,
because you know what you are.
Have a fantastic day ahead
படித்ததில் ரசித்தது
ஒரு கல்லூரியில் வாழ்க்கைத் தத்துவ வகுப்பு.
பேராசிரியர் ஒரு பெரிய கண்ணாடி ஜாடியை எடுத்து மேசையில் வைத்தார். அதனுள்ளே வெல்லக்கட்டிகளை இட்டு நிரப்பினார்.. பின் மாணவர்களைக் கேட்டார்..
இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?
ஆம் அய்யா..!
பின்னர் பேராசிரியர் ஜாடிக்குள் சிறு சிறு கற்கண்டுகளைப் போட்டார்.. வெல்லக்கட்டிகளின் இடைவெளியில் கற்கண்டுகள் புகுந்து இடத்தை அடைத்துக்கொண்டன.. பின்னும் வினவினார்..
இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?
ஆம் அய்யா..!
அதன் பின்னர், சீனியை ஜாடிக்குள் விட்டார்.. மென் துகள்கள் வெல்லக்கட்டிகளுக்கும், கற்கண்டுகளுக்கும் இடையில் இருந்த வெளியை நிரப்பின.. மீண்டும் கேள்வி எழுப்பினார்..
இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?
இம்முறை, மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர்.. "ஆம் அய்யா..!"
புன்னகைத்த பேராசிரியர், இம்முறை ஜாடிக்குள் இரண்டு கோப்பை பாலை ஊற்றி, "இந்த ஜாடி இப்போது நிறைந்துவிட்டதுதானே..?" என்று வினா எழுப்பினார்..
மாணவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.. எவராலும் சரியாக பதில் சொல்ல இயலவில்லை.. ஏற்கனவே சிலமுறை கூறி, தவறாகிப் போய்விட்டதல்லவா..?
பேராசிரியர் இப்போது சொன்னார்..
மாணவச் செல்வங்களே.. இதுதான் வாழ்க்கை.. வெல்லக்கட்டிகள் உங்கள் வாழ்வின் மகத்தான விடயங்களை குறிப்பவை.. கடவுள், பெற்றோர், கல்வி, உறவுமுறை, நற்பழக்கங்கள் போன்றவை..
கற்கண்டுகள், உங்கள் வேலை, இல்லம், கார் போன்ற முக்கியமான அம்சங்களைக் குறிப்பவை.
சீனி, மற்ற சிறு சிறு விடயங்களின் மாதிரி வடிவம்.. திரைப்படம், கேளிக்கை, உல்லாசப்பயணங்கள் போன்றவை.
உங்கள் வாழ்வில் சீனிக்கே முன்னுரிமை கொடுத்தால், வெல்லக்கட்டிகளுக்கு இடமில்லாமல் போய்விடும்.. கற்கண்டுகளால் உங்கள் வாழ்வை இட்டு நிரப்ப வகையில்லாமல் போய்விடும்..
எனவே எதை முதலில் முக்கியத்துவம் கொடுத்து உங்கள் வாழ்வை நிரப்பிக்கொள்ளவேண்டும் என்று சரியாகத் திட்டமிடுங்கள்..!
`
இனிய காலை வணக்கம்....